Sunday, January 1, 2017

ஊழல் அரசு தொடர்ந்து வாழ்வதற்கு, சமூக சேவை அமைப்புகளின் செயற்பாடுகள் பாரிய பங்களிப்பு செய்கின்றது.

ஊழல் நிறைந்த அரசு தொடர்ந்து வாழ்வதற்கு, சமூக சேவை அமைப்புகளின் சரியான சிந்தனை இல்லாத சில செயற்பாடுகள் பாரிய பங்களிப்பு செய்கின்றது.

அரசு,அரசியல் என்பது மக்களின் நலன்களை பேணி பாதுகாப்பதாகும். மக்களிடம் வரிப்பணத்தை வசூழித்து அதனைக்கொண்டு சரியான திட்டமிடல், முகாமை பொறிமுறையின் கீழ் அரசு செயற்படுவதன் மூலமே சிறந்த உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட ஒரு நாட்டை கட்டியெழுப்ப முடியும். இவ்வாறனதொரு சரியான பொறிமுறை இல்லாத ஊழலையே தொழிலாக கொண்ட அரசியல், நிர்வாக தலைமைகளையும் கொண்ட ஓட்டை பொறிமுறையை கேள்விக்கும் அழுத்தத்திற்கும் உட்படுத்தி தோலுரிக்கின்ற எந்த செயற்பாடுகளுமின்றி, அரசு பொதுமக்களின் வரிப்பணத்தை கொண்டு செய்ய வேண்டிய உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களை சமூக சேவை என்ற பெயரில் வரிப்பணம் செலுத்திய அதே பொதுமக்களிடம் போய் உண்டியல் குலுக்கி பொதுமக்களின் தலையில் இந்த சமூக சேவை அமைப்புக்கள் போடுவது ஊழல் அரசு தொடர்ந்து வாழ்வதற்கான ஒரு ஆயுட்காப்புறுதியாகும்.

இந்த பதிவின் நோக்கம் சமூக சேவைகளில் ஈடுபடுபவர்களை மட்டம் தட்டுவதோ அல்லது அவர்களது இஹ்லாஷை குறை காண்பதோ அல்ல, மாறாக சரியான சிந்தனைப் புரிதலுடனான செயற்படுகளில் சமூக சேவையாளர்கள் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என்பதுவே.

தர்மம் செய்யும் சிந்தனையும், மனிதாபிமானமும் எமது சமூகத்திடம் காணப்படுவது சந்தோஷத்திற்குரிய விடயம் தான். அதை பயனபடுத்தி “அரசு செய்ய வேண்டியதை பொதுமக்கள் தர்மம் மூலம் துடைத்தெறிவோம்” என்ற கோஷமும் செயற்பாடும் பிழையானது அநீதியானது. இச்செயற்பாட்டால் தனது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ள கூடிய ஒரு அரசியல் விழிப்புணர்வுமிக்க சமூகம் உருவாகும் நிலையும் இல்லாமல் போகின்றது. அரசு பரிந்துரைத்த எத்தனயோ விடயங்களை அது அமுலாக்கமால் உறங்கிக்கிகொண்டிருக்கும் வேளையில் அதனை இயக்கம்பெறச்செய்யும் செயற்பாடுகள் கைவிடப்பட்டு, தர்ம சிந்தணை மேலோங்கியிருப்பது மிகக்கவலைக்குரிய விடயமாகும்.

வீதிக்குப்பையை அகற்றுவது நகர,பிரதேச சபையின் பொறுப்பு. சமூக அக்கறை மக்களிடம் தாராளமாக காணப்படுவதென்பதற்காக சமூக நலன் விரும்பிகள் பொதுமக்களை பயன்படுத்தி குப்பையை அகற்ற வைப்பது பொருத்தமான செயலல்ல. கடமை தவறிய அரச நிறுவனத்தை இயங்க வைப்பது பற்றி சிந்தித்து அதற்கான செயற்பாடுகள் செய்வதுதான் சமூக சேவை. பொது மக்களிடம் சாந்தி, சமாதனம், விடுதலைக்கான வேட்கை அதிகமுள்ளதென்பதற்காக யுத்தத்திற்கு அவர்களை அனுப்புவதில்லை அது இராணுவம் செய்ய வேண்டிய வேலை. பொதுமக்களை யுத்தக்களத்திற்கு அனுப்பிவைத்துவிட்டு இராணுவத்தை உறங்கச்சொல்வதை எண்ணி பெருமிதமடைதளல்ல சமூகத்தலைமைகளின் வேலை.

“அரசு தன்னால் முடிந்தவற்றை செய்து கொண்டுதான் இருக்கின்றது” பொதுமக்கள் ஆகிய நாங்களும் எங்கள் தாய் நாட்டிற்காக எங்களால் முடிந்தவற்றை செய்வோம் என்று சொல்லும் ஒரு சாரார் எமது சமூகத்தில் இருக்கிறாக்கள். இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அரசு என்பது. நான்கு ஐந்து பெயரின் சந்தா பணத்தில் இயங்கி வரும் நலன்புரிச்சங்கமல்ல, முழு நாட்டு மக்களின் வரிப்பணத்தை பெற்றுக்கொண்டு நாட்டை நிருவகிக்கும் ஒரு சக்திவாய்ந்த நிறுவனம். அது நிறைவேற்ற வேண்டிய மக்களின் அடிப்படைத்தேவைகளையும் கைவிடும்போது கேள்விற்குட்படுத்தப்படவேண்டிய விடயமே தவிர தன்னால் முடிந்தவற்றை செய்கிறது என்று நியாயப்படுத்தும் விடயமல்ல. குறித்த நியாயப்படுதல் அரசை இன்னும் ஊழல் மிக்க சோம்பேறியாக மாற்றுவிடுகின்றது.

சமூக சேவை என்பது சமூகத்தில் உள்ள ஒரு பிரச்சனைக்கான நிரந்தரமான தீர்வை நோக்கிய வேலைத்திட்டங்கள் செய்வதும் அதற்காகன விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதுமாகும்.

Wednesday, December 21, 2016

ரஷ்ய நாட்டு தூதுவர் மீதான சூட்டுச்சம்பவம்

ரஷ்ய நாட்டு தூதுவர் மீதான சூட்டுச்சம்பவம் சிரியா மீதான அமெரிக்க,ரஷ்ய வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் துருக்கி சிரிய மக்களை காபிர்களிடம் கைவிட்டதன் காரணமாக ஏற்பட்ட ஒரு விளைவு. அர்துகான் உம்மத்தின் மீதான தன் கடமையை கைவிட்டார் ஆகவே உம்மத்தில் இவ்வாறான தனிமனித எதிர்வினையாற்றல்கள் தவிர்க்கமுடியாதது.

சுட்டது ஹலாலா,ஹராமா என்ற கோணத்தில் வாதங்களை முன்வைப்பது குறித்த சம்பவம் இடம்பெறக்காரணமாக அமைந்த காரணிகளை மழுங்கடிக்கச்செய்கின்ற ஒரு செயலும், உம்மத்தின் நியாயமான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தோற்கடிக்கப்பட்ட மனோநிலையையுடைய அரசியல் முதிர்ச்சியற்ற ஒரு சமூகத்தின் நிலையும் ஆகும்.

இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்து மொட்டையாக தீவிரவாதம் என்ற முத்திரையை முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்ப்பது பல தசாப்தங்களாக அமெரிக்க,ரஷ்ய,மேற்கத்தைய அரசுகள் முஸ்லிம் தேசங்களில் மேற்கொண்ட பாரிய மனிதப்படுகொலைகளை மறைக்கும் ஒரு முயற்சியாகும்.

முஸ்லிம் தலைமைகள் உம்மத்தை காபிர்களிடம் கைவிட்டு பாரிய துரோகமிழைத்தார்கள். முஸ்லிம் தேசங்கள் மீதான ஆக்கிரமிப்பும், சொத்துக்களின் சூறையாடல்களும் ,உயிர்ப்பலிகளும் உம்மத்திடம் ஆழ்ந்த வெறுப்புணர்வையும், மனச்சங்கடத்தையும் ஏற்படுத்தியதோடு மேற்கின் அரசியல் தலையீடுகளை நிராகரிக்கவும் செய்தது.

தூதுவர்கள் ,தூதுவராலையங்கள், இராணுவ முகாங்களையெல்லாம் அவர்களின் அரசியல் தலையீட்டை பிரதிநிதித்துவம் செய்பவைகளாக உம்மத் கருதியது அந்த உம்மத்தில் ஒருவன் அவற்றை எதிர்வுகொண்ட விதம் துப்பாக்கிச்சூடாக அமைந்தது.

உம்மத்தை இவ்வாறானதொரு நிலைக்குத்தள்ளிய காபிர் அரசுகளும், கையாலாகாத முஸ்லிம் நாடுகளின் தலைமைகளுமே கண்டிக்கப்படுதல் வேண்டும்.

Tuesday, December 20, 2016

பொறுமை என்றால் என்ன ? பொறுமையாளர்கள் யார்?

ஸப்ர் எனும் சொல் பொதுவாக பொறுமை என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பொறுமையின் யதாரத்த நிலை மற்றும் அதன் அரத்தத்தில் கொண்டுள்ள குழப்பத்தை போக்க பொறுமை எனும் இவ்விஷயத்தை பற்றி நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம்.

சில மக்கள் தாங்களுக்குள் ஒரு எல்லையை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர், இன்னும் தீயதை விட்டு விலகிடவும் இன்னும் அதை செய்பவர்களை விட்டும் விலகிடவும் இன்னும் முஸ்லிம்கள் இரத்தம் சிந்துவதையும் முஸ்லிம் நிலங்கள் மற்றும் வளங்கள் திருடப்பட்டும் மற்றும் சுரண்டப்பட்டு் வருவதையும் அல்லாஹ்(சுபு) வின் சட்டங்கள் திரிக்கப்பட்டு மற்றும் ஜிஹாத் என்பது ஒரு சர்ச்சைக்குரிய மற்றும் தீவிரவாத செயலாகவும் ஆகிவருதை பார்த்து இந்த விஷயங்களை விட்டு தங்களை விலக்கி கொள்ள வேண்டும் என நினைக்கின்றனர்.

அதாவது இன்றைய முஸ்லிம்களின் யதார்த்தநிலையை பற்றி முஸ்லிம்களிடத்தில் கேட்கப்பட்டால், அவர்கள் கூறுகிறார்கள்: துஆ செய்யுங்கள் சகோதரரே, இதற்கு நாம் என்ன செய்ய முடியும்? இன்றைய முஸ்லிம்கள் தீமையைப்பற்றியும் இறைமறுப்பை பற்றியும் எதிர்த்து தைரியமாக பேசுவதில்லை இன்னும் இதனால் அதிகாரிகள் மூலம் ஏற்படவிருக்கும் சிறைவசம் மற்றும் சித்திரவதை செய்யப்படுவோம் என அஞ்சுகின்றனர். எனவே அதற்கு பதிலாக பள்ளிவாசல் மூலையில் பதுங்கி இருந்து அமைதிகாத்து நான் பொறுமையாக இருக்கின்றேன் என்று கூறுகிறார்கள். அல்லாஹ்(சுபு) சொர்கத்தின்பால் வாக்களித்த பொறுமை இது கிடையாது.

நபி(ﷺ)அவர்கள் கீழ்கண்டவாறு துஆ செய்துள்ளார்கள்: “இறைவா! (வருங்காலத்தைப் பற்றியக்) கவலையிலிருந்தும், (நடந்து முடிந்துவிட்டவை பற்றிய) துக்கத்திலிருந்தும், இயலாமையிலிருந்தும், சோம்பலிலிருந்தும், கஞ்சத்தனத்திலிருந்தும், கோழைத்தனத்திலிருந்தும், கடன் சுமையிலிருந்தும், பிற மனிதர்களின் அடக்கு முறைகளிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.”

பொறுமை என்பது நீங்கள் உண்மையையே பேச வேண்டும் மற்றும் அதன் படி செயல்படவேண்டும் மற்றும் வழிபிறழாமலும், பலவீனம் அடையாமலும் அல்லது விட்டுக்கொடுக்காமலும் அல்லாஹ்வின் பாதையில் ஏற்படும் இன்னல்களை பொறுத்துக்கொள்வதாகும். இந்த வகையான பொறுமை தான் நம் உறுதியை பலப்படுத்தும் இன்னும் சுவனத்திற்கான பாதையை நெருக்கமாக்கும்.

இந்த பொறுமை தான் பிலால்( ரழி) அவர்களை அவர்களின் எஜமானர் கொடுமை செய்தபோது அஹத், அஹத் என்ற வார்த்தையை மட்டுமே முழங்கச்செய்தது. இந்த பொறுமை தான் முஸ்அப் இப்னு உமைர் (ரழி) அவர்கள் தன்னுடைய பெற்றோர் மறுத்தபோதும் தன் நிலையில் உறுதியுடன் நிலையாக இருந்து இன்னும் அழைப்புப்பணியில் முதலாமவராக திகழ்ந்து தொடர்ந்து விடாமுயற்சியுடன் அழைப்புப்பணி மேற்கொள்ளும் காரியத்தை செய்யவைத்தது. கப்பாப்(ரழி) அவர்களின் பொறுமை தான் சிபாஆ கூட்டத்தை சார்ந்தவர்கள் அவர்களை பயங்கரமான முறையில் தாக்கியபோதும் தனது அழைப்புப்பணியை விட்டுக்கொடுக்கவில்லை மாறாக அவருடைய சக தோழர்களுக்கு ஒரு முன்னுதாரமாக திகழ்ந்தார்கள் இன்னும் யாசிர் (ரழி) அவர்களின் குடும்பத்தின் பொறுமை: “யாசிரின் குடும்பத்தினரே பொறுமையாக இருங்கள் நிச்சயமாக சொர்கம் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது”

குபைப் (ரலி) அவர்களின் பொறுமை தான் இறைமறுப்பாளரிடம் பிடிப்பட்டு மேலும் சிறையில் அடைக்கப்பட்டு அதற்காக அவர் ஒரு முறை கூட புகார் செய்யாமல் இன்னும் அவரை ஷஹீத் ஆக்கும் வரை அமைதியாக இருந்து. இன்னும் ஜைத்(ரழி) அவர்களின் பொறுமை தான் “நபி(ﷺ) அவர்களுக்கு ஒரு முள்ளினால் காயம் ஏற்படும் சமயமானாலும் நான் எனது குடும்பத்தாருடன் ஆபத்தின்றி பாதுகாப்பாக பொறுமையுடன் இருக்க நான் விரும்பவில்லை.” என கூற வைத்தது.

இவ்வாறு கொடுங்கோலர் கையில் சிக்கி அவஸ்தை படும் நிலையிலும் அல்லாஹ்விற்காக தவிர வேறு யாருக்கும் அஞ்சாமல் உறுதியாக பொறுமையுடன் இருந்துள்ளனர்.

சஹாபாக்களின் இந்த பொறுமை தான் அவர்களை மூன்றாண்டுகள் அபூ தாலிப் பள்ளத்தாக்கில் பொருளாதார தடை விதித்து ஒதுக்கி வைத்த போது ஏற்பட்ட இன்னல்களை தாங்கிக்கொண்டு நிலைத்திருக்க செய்தது. முஹாஜிர் மற்றும் அன்சாரிகளின் பொறுமை தான் ரோம மற்றும் பாரசீக முஸ்ரிக்குகளை எதிர்த்து போராட செய்தது.

குர்ஆனில் அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

“...நிச்சயமாக,பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்.” (அல்குர்ஆன் : 39:10)

பொறுமையாளர்கள் அவர்களுடைய முழு கூலியையும் எவ்வித கணக்கின்றி பெறுவார்கள். பொறுமையாளர்கள் யாரென்றால் அல்லாஹ்(சுபு) ஆல் அவர்களுடைய படித்தளங்களை உயர்த்தப்பட்டவர்கள் ஆவர். பொறுமையில் மிக அதிக அளவிலான நன்மை உண்டு எந்த அளவிற்கென்றால் அது சில காரியங்களில் நேரடியாக சுவனத்தின் பக்கம் நம்மை அழைத்து செல்லும் அதில் ஒரு உதாரணம் கீழ்வரும் ஹதீஸில் விவரிக்கப்பட்டுள்ளது.

நபி(ﷺ) கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் “அல்லாஹ்(சுபு) கூறினான் நான் என் அடியானை அவரின் இரண்டு கண்களைக் கொண்டு சோதித்து அவன் பொறுமை காப்பானேயானால் அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்”

இது தான் அல்லாஹ்(சுபு) பொறுமைக்கு கொடுத்த உயர்ந்த படித்தளம் ஆகும். இது ஒரு சாதாரண விஷயமன்று, இது பாதிக்கக்கூடிய தீவரமான விஷயமாகும் இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம், ஏனெனில் இதைப்பற்றி அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

“உங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்து விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பீடித்தன; அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும் என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைகழிக்கப்பட்டார்கள்; நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது” (என்று நாம் ஆறுதல் கூறினோம்.) (அல்குர்ஆன் : 2:214)

“நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:155)

மேலும் அவன்(சுபு) கூறுகின்றான்

“(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிபந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்; ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.” (அல்குர்ஆன் : 3:186)

மனிதர்களில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறாள், பொறுமையை கடைபிடிக்கும் விஷயத்தில் தான் அவர்கள் வேறுபடுகிறார்கள், ஆனால் எவர் பொறுமையை பற்றிப்பிடித்து கொள்கின்றரோ இறுதியில் அவர்களே நன்மையை பெற்று கொள்வர் இன்னும் பொறுமையை மேற்கொள்ள அல்லாஹ்(சுபு) பெரிதும் பரிந்துரை செய்துள்ளான். அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:

“முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!” (அல்குர்ஆன் : 3:200)

“நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.” (அல்குர்ஆன் : 2:153)

மேலும் அவனுடைய(சுபு) அடியாட்களின் மீதான அளவுகடந்த கருணையின் பொறுட்டால், பேரிடரின்போது அல்லது பெருந்துன்பத்தின் போது அல்லது நோயின் போது பொறுமையாக இருந்த காரணத்திற்காக அதற்கு பகரமாக அவர்களுக்கு ஊக்கத்தொகையாக அவர்களின் பாவத்தை மன்னித்துவிடுகிறான்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிப்பில்ந பி(ﷺ)கூறினார்கள்: “ஆம்; எந்தவொரு முஸ்லிமுக்கு எவ்விதமான துன்பம் நேர்ந்தாலும் அதற்கு பகரமாக மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை“ என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவிப்பில் “ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக அல்லாஹ்(சுபு) அவரின் பாவங்களை மன்னிக்காமல் இருப்பதில்லை”.

பொறுமையின் முக்கியத்துவம் குறித்தும் அதன் விஷேசத்தை குறித்தும் நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளாமல் இருக்கலாம், ஆனாலும் குறைந்தபட்சம் அதன் பெரும் வெகுமதிகளையாவது நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எனினும் பொறுமையைப்பற்றிய பிரச்சினை என்னவெனில் அது பற்றிய தவறான புரிதல் கொண்டிருப்பது, அதை எவ்வாறு எதிர்கொள்ளவது, மற்றும் பொறுமையை கடைபிடிப்பது எதை குறிப்பிடுகிறது என்பது ஆகும்.

மேலும், பொறுமை அல்லாஹ்(சுபு) வின் மீது அச்சம் இல்லாமல் வெளிப்படாது என தன் திருமறையில் குறிப்பிடுகிறான்,

“நிச்சயமாக எவர் (அவனிடம் பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோர் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான்” (அல்குர்ஆன் : 12:90)

பொறுமை என்பது அல்லாஹ்வின் பாதையில்(அல்லாஹ்விற்காக) ஜிஹாத் செய்ததற்கு ஒப்பாகும்.

“மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை – அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.” (அல்குர்ஆன் : 3:146)

மேலும், விதியின் மீதும் மற்றும் துன்பத்திலும் பொறுமை காத்தல் என்பது ஒருவரை உறுதியுடையவர்களாகவும் இன்னும் நிலையானவர்களாகவும் , இன்னும் அல்லாஹ்வின் மார்கத்தில் வேரூன்றியவராக இருக்க வழிவகுக்கிறது. அது ஒரு மனிதனை குர்ஆனை முழுமையாக உணர்ந்து கொள்ளவும் இன்னும் பொறுமையாக இருக்கும் காரணத்தால் வழித்தவறாமல் இருப்பதற்கும் வழிவகுக்கிறது. அது அவனது அப்தை(அடியான்) அவனுடைய இபாதின்(வணக்கம்) நெருக்கத்திற்கு கொண்டு வருகிறது.

“இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.” (அல்குர்ஆன் : 21:87)

எனவே தற்காலத்திலும், மேற்கத்திய அரசையும் அவர்களுடைய தாராண்மைவாத சிந்தனை, கலாச்சாரம் போன்றவற்றை எதிர்த்து பூமியில் நீதியை நிலைநாட்ட இஸ்லாமிய அரசை மீண்டும் நிலைநாட்ட அழைப்புப்பணி செய்கின்ற தாயிக்கள் இஸ்லாத்தை மேற்கத்திய சிந்தனைகளுடன் திரிக்காமலும், சமரசம் செய்யாமலும் விடாமுயற்சியுடன் இஸ்லாத்தை அதன் உண்மையான வடிவிலேய சொல்வதில் எவ்வித தயக்கத்தையும் காட்டாமல் பயணிக்கும் போது நிச்சயமாக அனைத்து விதமான சித்திரவதை மற்றும் வேதனைகளையும் எதிர்கொள்வார்கள் அப்போது அதனை தாங்கி கொள்ளவதே இஸ்லாம் சொல்லும் பொறுமையாகும்.