ரஷ்ய நாட்டு தூதுவர் மீதான சூட்டுச்சம்பவம் சிரியா மீதான அமெரிக்க,ரஷ்ய வெளிநாட்டுக்கொள்கைகள் மற்றும் துருக்கி சிரிய மக்களை காபிர்களிடம் கைவிட்டதன் காரணமாக ஏற்பட்ட ஒரு விளைவு. அர்துகான் உம்மத்தின் மீதான தன் கடமையை கைவிட்டார் ஆகவே உம்மத்தில் இவ்வாறான தனிமனித எதிர்வினையாற்றல்கள் தவிர்க்கமுடியாதது.
சுட்டது ஹலாலா,ஹராமா என்ற கோணத்தில் வாதங்களை முன்வைப்பது குறித்த சம்பவம் இடம்பெறக்காரணமாக அமைந்த காரணிகளை மழுங்கடிக்கச்செய்கின்ற ஒரு செயலும், உம்மத்தின் நியாயமான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் தோற்கடிக்கப்பட்ட மனோநிலையையுடைய அரசியல் முதிர்ச்சியற்ற ஒரு சமூகத்தின் நிலையும் ஆகும்.
இவ்வாறான சம்பவங்களை தொடர்ந்து மொட்டையாக தீவிரவாதம் என்ற முத்திரையை முஸ்லிம்களிடமிருந்து எதிர்பார்ப்பது பல தசாப்தங்களாக அமெரிக்க,ரஷ்ய,மேற்கத்தைய அரசுகள் முஸ்லிம் தேசங்களில் மேற்கொண்ட பாரிய மனிதப்படுகொலைகளை மறைக்கும் ஒரு முயற்சியாகும்.
முஸ்லிம் தலைமைகள் உம்மத்தை காபிர்களிடம் கைவிட்டு பாரிய துரோகமிழைத்தார்கள். முஸ்லிம் தேசங்கள் மீதான ஆக்கிரமிப்பும், சொத்துக்களின் சூறையாடல்களும் ,உயிர்ப்பலிகளும் உம்மத்திடம் ஆழ்ந்த வெறுப்புணர்வையும், மனச்சங்கடத்தையும் ஏற்படுத்தியதோடு மேற்கின் அரசியல் தலையீடுகளை நிராகரிக்கவும் செய்தது.
தூதுவர்கள் ,தூதுவராலையங்கள், இராணுவ முகாங்களையெல்லாம் அவர்களின் அரசியல் தலையீட்டை பிரதிநிதித்துவம் செய்பவைகளாக உம்மத் கருதியது அந்த உம்மத்தில் ஒருவன் அவற்றை எதிர்வுகொண்ட விதம் துப்பாக்கிச்சூடாக அமைந்தது.
உம்மத்தை இவ்வாறானதொரு நிலைக்குத்தள்ளிய காபிர் அரசுகளும், கையாலாகாத முஸ்லிம் நாடுகளின் தலைமைகளுமே கண்டிக்கப்படுதல் வேண்டும்.